'டெஹல்கா' தருண் தேஜ்பாலிடம் 2 மணி நேரம் கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை
பனாஜி: பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலிடம் கோவா போலீசார் நேற்று 2 மணி நேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது டெஹல்கா பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் தேஜ்பால் தம்மை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று சக பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவா போலீசார், தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் நேற்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சனிக்கிழமை வரை கால அவகாசம் கேட்டு தேஜ்பால் கடிதம் எழுதியிருந்தார். இதை நிராகரித்த கோவா போலீஸ், தருண் தேஜ்பாலை தேடி டெல்லி சென்றது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நேற்று வாபஸ் பெற்ற தருண் தேஜ்பால், கோவா அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்து நேற்று பிற்பகல் 2.30 மணி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று கோவா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் டெல்லியில் இருந்து மனைவியுடன் தருண் தேஜ்பால் மாலை 5 மணிக்கு கோவா வந்தடைந்தார். அவர்களை கோவா போலீசார் பாதுகாப்பாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தேஜ்பால் மீது தாமதமாக புகாரை பதிவு செய்திருப்பதாகவும், இது அரசியல் சதி என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் தன்மையை மட்டுமே பார்ப்பதாக கூறினார். மேலும் பலாத்கார புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு தேஜ்பால் வழக்கறிஞருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அந்த பெண்ணை இழிவுபடுத்தி அவரது வாழ்க்கையில் விளையாடக்கூடாது என்றும், இது சிறிய தவறு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று காலை வரை ஒத்திவைப்பதாகவும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின்னர் தருண் தேஜ்பாலை விசாரணைக்காக கோவா போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் 2 மணி நேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியது கோவா போலீஸ்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications