டெஹல்கா தேஜ்பால் விவகாரம்: கோவா ஹோட்டல் லிப்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை!
Subscribe to Oneindia Tamil

சக பெண் பத்திரிகையாளரை டெஹல்கா ஆசிரியர் தேஜ்பால் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவா போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன் டெல்லிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் கோவா ஹோட்டல் லிப்டில் பொருத்தப்பட்ட கேமராவை ஆராய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் ஹோட்டலில் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் லிப்டில் கேமரா இல்லாதது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேமரா பொருத்தப்படாமலேயே இருந்ததா? அல்லது கேமரா பொருத்தப்பட்டு சம்பவத்துக்குப் பின் கழற்றப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications