ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா போலீஸ் சம்மன் !! சந்திரசேகர் ராவ் மீது ஆந்திரா
ஆந்திரா : தெலுங்கானா மேலவைத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மேலவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பதற்காக நியமன உறுப்பினரான எல்விஸ் ஸ்டீபன்சன் என்பவருக்கு பணம் கொடுக்க முயன்றபோது, கையும் களவுமாக பிடிபட்ட சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கும் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஸ்டீபன்சனுடன் சந்திரபாபு நாயுடு பேசியதாக ஒரு தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
குற்றவியல் சட்டம் 41வது பிரிவின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மனின் படி, முதலமைச்சரை விசாரிக்க, மாநில ஆளுநரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பதையும் தெலுங்கானா போலீசார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனிடையே, தொலைபேசி உரையாடலில் உள்ள குரல் சந்திரபாபு நாயுடுவினுடையது என்பது உறுதியானால் அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநில எம்.எல்.ஏக்களின் தொலைபேசி உரையாடல்களை முறைகேடாக பதிவு செய்ததாகவும், சதி செய்ததாகவும், தவறான ஆவணங்களை வெளியிட்டதாகவும் அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications