ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா போலீஸ் சம்மன் !! சந்திரசேகர் ராவ் மீது ஆந்திரா
ஆந்திரா : தெலுங்கானா மேலவைத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மேலவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பதற்காக நியமன உறுப்பினரான எல்விஸ் ஸ்டீபன்சன் என்பவருக்கு பணம் கொடுக்க முயன்றபோது, கையும் களவுமாக பிடிபட்ட சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவிற்கும் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஸ்டீபன்சனுடன் சந்திரபாபு நாயுடு பேசியதாக ஒரு தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கானா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
குற்றவியல் சட்டம் 41வது பிரிவின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த சம்மனின் படி, முதலமைச்சரை விசாரிக்க, மாநில ஆளுநரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்பதையும் தெலுங்கானா போலீசார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனிடையே, தொலைபேசி உரையாடலில் உள்ள குரல் சந்திரபாபு நாயுடுவினுடையது என்பது உறுதியானால் அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர மாநில போலீசார் விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநில எம்.எல்.ஏக்களின் தொலைபேசி உரையாடல்களை முறைகேடாக பதிவு செய்ததாகவும், சதி செய்ததாகவும், தவறான ஆவணங்களை வெளியிட்டதாகவும் அதன் அடிப்படையில் சந்திரசேகர ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications