குளிர்கால கூட்டத்தொடரில் தனித்தெலுங்கானா மசோதா, இல்லையேல் மீண்டும் போராட்டம்: சுஷ்மா எச்சரிக்கை
ஐதராபாத்: எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரின்போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தை பிரித்து தர வேண்டும் என சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று, ஆந்திர ஐதராபாத்தில் உள்ள மஹ்பூப் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ். அப்போது பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது...

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு...
தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதி மக்களிடையே மத்திய அரசு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண முன்வர வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடர்....
எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரின்போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தை பிரித்து தர வேண்டும்.

ஐதராபாத் தலைநகர்...
ஐதராபாத்தை தலைநகராக கொண்டு 10 மாவட்டங்கள் உள்ளடங்கிய தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி விழா....
அவ்வாறு தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திக்க நான் இங்கு வருவேன்.

இரண்டாம் கட்ட போராட்டம்...
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியே பேசி வரும் சூழ்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரின் போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற தவறினால் பா.ஜ.க. சார்பில் தனித்தெலுங்கானா கோரிக்கைக்கான இரண்டாம் கட்ட போராட்டத்தில் பங்கேற்க நான் மீண்டும் இங்கு வருவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications