பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் பல மாவட்டங்களில் புயலுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பீகாரின் வட கிழக்கு பகுதியான அராரியா மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.
கதிஹார் மாவட்டத்தில் கர்செல் கிராமத்தில் தகரக் கூரை போட்ட ஒரு வீட்டின் மீது இடி விழுந்ததில் ஒரு நபரும் அவரது மருமகளும் உடல் கருகி உயிரிழந்தனர். இதேபோல், சுபவுல் மாவட்டத்தில் இருவரும் மின்னலுக்கு பலியாகினர்.
மொத்தத்தில், இந்த 3 மாவட்டங்களில் மட்டும் இன்று ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications