டெல்லி குஜராத் பவனை தீவிரவாதிகள் தாக்கலாம்... உளவுத்துறை எச்சரிக்கை- தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

16வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப் பட உள்ளன. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. முன்கூட்டியே பாஜக தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள குஜராத் பவனை தீவிரவாதிகள் தாக்கலாம் என டெல்லி போலீசாருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மோடி டெல்லி வரும்போது எல்லாம் குஜராத் பவனிலே தங்குவார் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications