ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலி!
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ராணுவ வீரர்கள் 2 பேரும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுபாப்பு படையினரின் வாகனம் தீக்கிரையானது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.
காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவம், ஊடுருவியும் வருகின்றனர். பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications