தீவிரவாதிகளின் ரகசிய 'கால்குலேட்டர் ஆப்'- ராணுவத்தின் விசாரணையில் அம்பலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க கால்குலேட்டேர் என்னும் மொபைல் ஆப் ஒன்றை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை ராணுவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கு இந்தியா ராணுவம் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக தீவிரவாதிகள் ஸ்மார்ட் போனில் கால்குலேட்டர் ஆப் என்பதை நிறுவி தகவல்களை பறிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Terrorists are using 'Calculator' app to avoid detection by army

இது தொடர்பாக ராணுவ வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது. இதனிடையே, கண்காணிப்பில் சிக்காத வகையில் தீவிரவாதிகள் 'கால்குலேட்டர்' என்ற மொபைல் ஆப் பயன்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில், கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது, தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக கால்குலேட்டர் ஆப் உருவாக்கியுள்ளனர் என்பது குறித்து தெரியவந்தது.

இந்தச் செயலியின் மூலம், இணையதள வசதிகள் மற்றும் செல்லுலார் சிக்னல் இல்லாமலே தகவல்கள் பறிமாற்றம் செய்து வந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக குறுஞ் செய்திகள், தங்களது இருப்பிடங்கள் ஆகிவற்றை பறிமாறி வந்துள்ளனர்.

இதன் மூலம் எல்லைக்கு அப்பால் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு, நாச வேலைகளை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+