ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்தார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார்.
டெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை 11 மணிக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் , முதல்வர் பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்தன.

இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என கூறி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநர் மறுத்துவிட்டார். இதனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியினரும் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனிடையே கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதாக தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications