நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. போராட்டத்தை கைவிடுங்கள்... விவசாயிகளிடம் தம்பிதுரை வேண்டுகோள்
30வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டக்களத்திற்கு 4வது முறையாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லி: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை 4வது முறையாக அதிமுக எம்பி தம்பிதுரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 30வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எலி கறி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாம்பு கறி, எலி கறி தின்று தங்களது கொடுமையான சூழலை அரசிற்கு எடுத்துரைக்க முயன்றனர்.

உடலில் எழுதி..
அந்த வகையில் நேற்று விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு தங்களது போராட்டம் நடத்தினர். இன்று கோரிக்கைகளை மையினால் உடலில் எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தம்பிதுரை சந்திப்பு
இந்நிலையில், இன்று அதிமுக எம்பியும் லோக் சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒத்தி வைப்பு தீர்மானம்
பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை, "விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக எம்பிக்கள் பேசினார்கள். இதுகுறித்து பேசுவதற்கு எம்பிக்கள் இருக்கிறோம். எனவே போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்" என்று விவசாயிகளிடம் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications