நாட்டை பரபரப்பாக்கிய கனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு- நவ. 7-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதி நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஒரு வழக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.

The CBI court will pronounce the verdict in 2G scam case on today

விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் ரீதியாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 25ம் தேதியன்று (இன்று) தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று, நீதிபதி ஷைனி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். எனவே இன்று மதியம் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்பதால் நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 3வது முறையாக தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+