முன் எப்போதையும் விட, மதம், கொள்கைகளால் நம்மிடம் பிளவு அதிகரித்துள்ளது.. ரஞ்சன் கோகாய் பேச்சு
Recommended Video

டெல்லி: அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற தீபக் மிஸ்ராவின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றபோது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் கூறியதாவது:
பிற காரணங்களை புறம் தள்ளிவிட்டு அரசியல் சாசன உரிமைகள் காக்கப்பட வேண்டியது அவசியம். இந்த முயற்சியில் நாம் தோற்றால், பிறர் மீது வெறுப்பை காட்டுவது, ஒருவருக்கொருவர் கொலை செய்வது போன்றவை தொடரும்.
[ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை ]
இந்த விஷயத்தில் நீதித்துறையும், பார் கவுன்சிலும் முன்னணியில் இருக்க வேண்டும்.
அனேகமாக நாம் இப்போதுதான், ஜாதி, வகுப்பு, பாலியல், மதம், கொள்கைகள் அடிப்படையில் முன்பைவிட அதிகமாக பிளவுகளை பார்த்து வருகிறோம். நமக்கு அடையாளம் அளிக்கும் முயற்சி நடக்கிறது. நாம் எதை அணிய வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை பேச வேண்டும், படிக்க வேண்டும், எதை குடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படுகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், சிறு விஷயம் என்று கூட எதுவும் இல்லை.
சில விஷயங்கள், நம்மை பிளவுபடுத்தி, வெறுப்பை விதைக்கின்றன. இந்த கேள்விகளுக்கு விடை காண, இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை எல்லோரும் கூர்ந்து பார்க்க வேண்டும். நமது தனிப்பட்ட நம்பிக்கைகளும், சுவைகளும் அரசியல் சாசன வழியில் மேம்படுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
ஏதாவது ஒரு சந்தேகம் வந்தாலும், கருத்து வேறுபாடு வந்தாலும் அதை அனுமதிக்க வேண்டும். அதுதான், இந்திய அரசியல் சாசனத்திற்கு கொடுக்கும் மரியாதை.
இந்திய அரசியல் சாசனம் என்பது, நன்கு செயல்படக்கூடியது, நெகிழும்தன்மை கொண்டது, நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையிலான பலம் கொண்டது. நீதியின் வாயிற்காப்பாளர்களாக செயல்படுவதுதான் நமது பணி.
ஆதார், ஹோமோசெக்ஸ், தனியுரிமை, குழுவாக கொலை செய்யும் சம்பவங்கள், குடிமை உரிமைகள் பாதுகாப்பு விஷயங்களில் வழங்கிய தீர்ப்புக்காக தீபக் மிஸ்ரா நினைவில் வைக்கப்படுவார். இவ்வாறு ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications