கர்நாடக சட்டசபை: கடைசி நேரத்தில் எடியூரப்பா மனமாற்றம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காமலே முடிந்தது
கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடியது.
Recommended Video

பெங்களூர்: உணவு இடைவேளை விடப்பட்டு இருந்த கர்நாடக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது. கர்நாடக சட்டசபையில் இதுவரை 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் அரை மணி நேரத்தில் 28 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேணடும் என்ற நிலைமை இருந்த போது எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த முதல் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு புதிய தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் முதல் நபராக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எம்எல்ஏவாக பதவியேற்றார். வரிசையாக எம்எல்ஏக்கள் பதவியேற்றார்கள். இதில் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் உள்ளிட்ட இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை.

கர்நாடக சட்டசபையில் ஒரே நேரத்தில் இரண்டு இரண்டு எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். வேகமாக பதவி ஏற்க வேண்டும் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பதவி ஏற்கும் முறை பின்பற்றப்பட்டது. எப்போதும் எம்எல்ஏக்கள் தனித்தனியாகவே பதவி ஏற்பார்கள். மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக சட்டசபையில் இதுவரை 193 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர். இன்னும் 28 எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வேண்டும். உணவு இடைவேளைக்காக சட்டசபை கூட்டம் மதியம் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இடைவேளை விடப்பட்டு இருந்த கர்நாடக சட்டசபை மீண்டும் கூடியுள்ளது.
உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் பதவி ஏற்பு நடக்கும். அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இடைப்பட்ட நேரத்தில் எம்எல்ஏக்களுடன் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசாத வகையில், டிஜிபி பாதுகாப்பு அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications