26 பேரை பலி கொண்ட நக்சல்களின் வெறித்தனமான தாக்குதலின் பின்னணி இதுதானாம்!
பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதன் பகீர் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பகீர் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரிசர்வ் படையினர் அங்குள்ள மோசமான சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த 300க்கும் மேற்பட்ட நக்சல்கள்,சரமாரியாகச் சுட்டனர்.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத சிஆர்பிஎப் வீரர்களில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நக்சல்கள் தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாலை வசதியில் மும்முரம்
சத்தீஸ்கர், பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் மொத்தம் 5,412 கிலோமீட்டர் தொலைவில் வனப் பகுதிகளில் சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை விரும்பாத நக்சல்கள் மொத்தமுள்ள 44 மாவட்டங்களிலும்,படை வீரர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் அவ்வப்பொழுது எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.
இதன் எதிரொலியாகவே, நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலை வசதிகள் தரமாக அமைக்கப்பட்டுவிட்டால், அந்தப் பகுதிகள் பள்ளிகள், கல்லூரிகள்,மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என்று நகர்ப்புறமயமாகிவிடும் என்பதால் நக்சல்கள் எதிர்க்கின்றனர். மேலும் நவீன வசதிகள் தங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்படுவதை நக்சல்கள் எப்போதும் விரும்பியதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் படையினர் உதவியுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,நக்சல்கள் தாக்குதல் நடந்துள்ளது. இதனையடுத்து சாலை அமைக்கும் பணியில் இப்போதைக்கு ஈடுபடவேண்டாம் என்று சிஆர்பிஎப் முடிவு செய்துள்ளது. இதுதான் நக்சல் தாக்குதல்களின் நோக்கமும் கூட என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications