திருப்பதியில் கொட்டும் வருமானம்... தெலுங்கானாவிலும் கோயில் கட்ட சந்திரசேகர ராவ் முடிவு
ஐதராபாத் : ஆந்திராவில் திருப்பதி கோயிலுக்கு இணையாக தெலுங்கானா அரசு ரூ. 800 கோடி செலவில் யதாத்ரி பகுதியில் மலை உச்சியில் கோயில் கட்ட முடிவு செய்திருப்பது விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கானாவில் தொடர்ச்சியாக விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில் கோயில் கட்ட இவ்வளவு கோடி ரூபாயை செலவிடுவதா என்ற விவாதம் நடந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இம்மாநில முதல்வராக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார்.
ஆந்திராவின் முதல்வராக தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு உள்ளார். ஆந்திர மாநிலத்திற்குள் உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இதன் பெருமை ஆந்திராவின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருவது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை உறுத்தி வருகிறது.
தெலுங்கானாவில் கடந்த 2014-15-ம் ஆண்டு ஜுன் மாதம் வரையில் 409 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. போதிய மழையின்மை, கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்த வண்ணம் உள்ளன
இந்த சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ், திருப்பதி கோயிலுக்கு போட்டியாக தெலுங்கானாவின் யதாத்ரி பகுதியில் மலை உச்சியில் ரூ.800 கோடி செலவில் கோயில் கட்ட நிதி ஒதுக்கியுள்ளார். இந்த முடிவு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வளவு கோடி பணத்தை வாரி இறைத்து கோயில் கட்டுவதற்கு பதிலாக அத்தொகையை விவசாயிகள் பிரச்னை தீர செலவிட்டு தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கோயில் முக்கியமா? விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்துவது முக்கியமா? என்ற விவாதம் தற்போது ஆந்திரா, தெலுங்கனா மாநிலங்களில் அனலைக் கிளப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications