ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை- ஒ.என்.ஜி.சி இயக்குநர் பேட்டி
ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை அதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என கூறினார்.
திருவனந்தபுரம்: நெடுவாசலில் ஹைட்ரோ காப்ர்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் 17ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், இந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றும் மத்திய அரசு அத்திட்டத்தை கைவிட வேண்டும் என 17ஆவது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி, ''ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. காரணம் இது மரபு சார்ந்த உற்பத்தி.
மரபு சாராத ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில்தான் பிரச்சனைகள் எழக்கூடும். ஆனால் மரபுசார்ந்த முறையில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் முறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்துக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
மேலும், எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, அதன் இறக்குமதியை 10 சதவிகிதம் அளவுக்கு குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை. ஹைட்ரோ-கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. ஹைட்ரோகார்பன் வாயு எடுப்பதால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லை. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை பற்றி கவலை வேண்டாம் என்றார் திவேதி.
ஆனால், கடலில் எண்ணைய் கொட்டினால் அதை எடுக்க முறையான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால், பிளாஸ்டிக் வாளியில் அள்ளியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications