வேண்டும் என்றே ஐபி எச்சரிக்கையைப் புறக்கணித்துள்ளார் நிதீஷ் குமார் - பாஜக

இதுகுறித்து பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், நரேந்திர மோடி தாக்கப்படலாம் என்று தங்களுக்கு உளவுத்துறையிடமிருந்து தகவல் வரவில்லை என்று நிதீஷ் குமார் கூறுகிறார். ஆனால் நரேந்திர மோடியின் கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இதுதொடர்பாக ஐபி எச்சரிக்கை விடுத்து கடிதமும் அனுப்பியுள்ளது.
அந்த எச்சரிக்கையை, தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற எச்சரிக்கையை நிதீஷ் குமார் அரசு வேண்டும் என்றே அலட்சியப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி பொதுவான எச்சரிக்கையையும், அக்டோபர் 23ம் தேதி இந்தியன் முஜாஹிதீன் குழுவினர் மோடியின் கூட்டத்தை சீர்குலைக்கலாம் என்று குறிப்பிட்டும் ஐபி எச்சரித்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க பீகார் அரசும், காவல்துறையும் தவறியுள்ளன. வேண்டும் என்றே அவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர். மிகவும் மெத்தனமாக நடந்துள்ளனர் என்றார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications