3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான்.... ம.பி. அரசு அதிகாரியின் 'அடடே' ஆரூடம்
போபால்: 3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான் என மத்திய பிரதேச அரசு அதிகாரியான அகிலேஸ்வரனானந்த் ஆருடம் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு பசுக்கள் மற்றும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. செத்த மாட்டின் தோலை உரித்தததால் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்; மாட்டிறைச்சி வைத்திருந்தால் தாக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர். பிரதமர் மோடி கூட பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வெறித்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

3-வது உலகப் போர்...
இந்த நிலையில் மத்திய பிரதேச கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் மகா மண்டலேஸ்வர் சுவாமி அகிலேஸ்வரனானந்த், 3-வது உலகப் போரே பசுக்களால்தான் நடக்கப் போகிறது என்று ஒரு போடு போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

முதல் சுதந்திரப் போர்
பசுக்கள் எப்போதும் சர்ச்சைகளுக்கு காரணமாகவே இருந்து வந்துள்ளன. உதாரணமாக 1857-ம் ஆம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போர் வெடித்ததற்கு காரணமே பசுக்கள்தான்.

கோபம் வரும்..
பொதுவாக பசுக்களை நேசிப்பவர்களுக்கு அது இறந்து போனாலோ, காயம்பட்ட நிலையில் வண்டியில் ஏற்றினாலோ கடும் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக அவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்காமல் அந்த வாகனங்களை தடுத்து போலீசுக்காக காத்திருக்க வேண்டும்.

பசுவதை தடுப்பு சட்டம்
நாட்டின் அனைத்து மாநிலங்களுமே பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தினால் மாநில எல்லைகளின் வழியாக மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அகிலேஸ்வரனானந்த் கூறினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications