3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான்.... ம.பி. அரசு அதிகாரியின் 'அடடே' ஆரூடம்
போபால்: 3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான் என மத்திய பிரதேச அரசு அதிகாரியான அகிலேஸ்வரனானந்த் ஆருடம் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு பசுக்கள் மற்றும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. செத்த மாட்டின் தோலை உரித்தததால் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்; மாட்டிறைச்சி வைத்திருந்தால் தாக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர். பிரதமர் மோடி கூட பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வெறித்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

3-வது உலகப் போர்...
இந்த நிலையில் மத்திய பிரதேச கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் மகா மண்டலேஸ்வர் சுவாமி அகிலேஸ்வரனானந்த், 3-வது உலகப் போரே பசுக்களால்தான் நடக்கப் போகிறது என்று ஒரு போடு போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

முதல் சுதந்திரப் போர்
பசுக்கள் எப்போதும் சர்ச்சைகளுக்கு காரணமாகவே இருந்து வந்துள்ளன. உதாரணமாக 1857-ம் ஆம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போர் வெடித்ததற்கு காரணமே பசுக்கள்தான்.

கோபம் வரும்..
பொதுவாக பசுக்களை நேசிப்பவர்களுக்கு அது இறந்து போனாலோ, காயம்பட்ட நிலையில் வண்டியில் ஏற்றினாலோ கடும் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக அவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்காமல் அந்த வாகனங்களை தடுத்து போலீசுக்காக காத்திருக்க வேண்டும்.

பசுவதை தடுப்பு சட்டம்
நாட்டின் அனைத்து மாநிலங்களுமே பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தினால் மாநில எல்லைகளின் வழியாக மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அகிலேஸ்வரனானந்த் கூறினார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 20 அதிருப்தி எம்பிக்கள் "என்சிபிஐ" கட்சியில் ஐக்கியம்.. பின்னணியில் மெகா பிளான் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications