யூரி தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் நடந்த தீவிர தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட, 21 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Those behind Uri terror attack won’t go unpunished: Modi

இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,

யூரியில் நடந்த கோழைத்தனமாக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை நாட்டு மக்களிடம் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாத தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் பேசியுள்ளேன் என்றார்.

யூரி தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

இது கண்டனத்திற்குரியது. அவர்கள் இது போன்ற தாக்குதல்களால் நம்மை மிரட்டலாம். ஆனால் உள்நாட்டு பாதுகாப்பை பொறுத்த வரை இந்தியா பலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதை எந்த மிரட்டலாலும் தடுக்க முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+