இந்திய நீதித்துறை மீது நம்பிக்கையில்லாதவர்கள் பாகிஸ்தான் போகலாம்: சாக்ஷி மகாராஜ்
டெல்லி: முஸ்லிம் என்பதற்காகவே, மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி கூறிய கருத்துக்கு, பாஜக தலைவர்களில் ஒருவரான சாக்ஷி மகாராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய நீதி பரிபாலனத்தை மதிக்காதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சாக்ஷி மகாராஜ் கூறியதாவது: இந்தியாவின் கதவுகள் திறந்தே உள்ளன. இந்திய நீதி பரிபாலனத்தை நம்பாதவர்கள் தாராளமாக வாசல் வழியாக பாகிஸ்தான் செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாக்ஷி மகாராஜ் கருத்துக்கு டிவி்ட்டர் போன்ற சமூக தளங்களில் ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பும் சிலரை இவ்வாறு மகாராஜ் கூறியிருந்தாலும், அப்போது எதிர்ப்புகளே பரிசாக கிடைத்தன. தற்போதுதான் அவரது கருத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. மும்பையில் பொது இடங்களில் குண்டு வைத்து 257 அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications