சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மோடியை தீவிரவாதிகள் குறி வைக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆண்டுதோறும் டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று தான் உரையாற்றி வருகிறார்.

Threat to PM’s life higher this Independence day

இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றும் பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.

மேலும் மோடியை சுதந்திரன தின கொண்டாட்டத்தின்போது குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு வலியுறுத்துங்கள் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தோவலை கேட்டுக் கொண்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் ராணுவம் மற்றும் காவல் நிலையங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+