திரிபுராவில் பாஜகவை வெல்ல வைத்த மும்மூர்த்திகள்
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக அதிரடியாக வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதர் தலைமையில் பிப்லப் குமார் தேப், சுதிப் ராய் பர்மன், என்சி தெப்பார்மா ஆகியோர் அடங்கிய டீம்தான் பாஜக வெற்றிக்கு காரணம்.
பாஜகவின் மாநில தலைவர் பிப்லப் குமார் தேப் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரும் ஒரு காரணம். கடந்த ஆண்டு காங்கிரஸ், திரிணாமுல் தலைவர்களை வளைத்துப் போட்டதிலும் குமார் தேப் பங்கு முக்கியமானது.

சுதிப் ராய் பர்மன், முன்னாள் முதல்வர் சமிர் ரஞ்சன் பர்மனின் மகன். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸுக்கு 5 எம்.எல்.ஏக்களுடப்ன் சென்றவர் பர்மன். பின்னர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். அகர்தலா தொகுதியில் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
என்சி தேப்பர்மா... இவர்தான் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் தலைவர். திரிபுரா வாக்காளர்களில் 37% பழங்குடியினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு விழவைத்தவர்,












Click it and Unblock the Notifications