கர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. சரமாரியாக வெட்டி தள்ளிய கும்பல்.. ஆர்எஸ்எஸ் தலைவர் குடும்பமே பலி
ஆர்எஸ்எஸ் பிரமுகரை குடும்பத்துடன் வெட்டி கொலை செய்துள்ளனர்
கொல்கத்தா: கோபால் வீடு முழுக்க ஒரே ரத்தம்.. அவரையும், அவரது மனைவி பியூட்டி, குழந்தையையும் மர்மநபர்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜியாகாஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால். இவர் ஒரு ஆசிரியர். ஆர்எஸ்எஸ் பிரமுகரும் கூட. இவரது மனைவி பெயர் பியூட்டி. இவர்களுக்கு அங்கன் என்ற 8 வயது மகன் இருக்கிறான். இப்போது பியூட்டி திரும்பவும் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் 3 பேருமே அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். யார் இவர்களை கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எனினும் இந்த சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை எஸ்பி சொல்லும்போது, "ஆசிரியர் போந்து கோபால் வீட்டு பக்கத்தில் விஜயதசமி பூஜைகள் நடந்துள்ளன. ஆனால், இவர் குடும்பத்தில் இருந்து மட்டும் அந்த பூஜைக்கு செல்லவில்ல. அதனால்தான் அங்கிருப்பவர்களுக்கு சந்தேகம் வீட்டுக்கே வந்து என்ன, ஏதென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் கோபால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
தட்டி தட்டி பார்த்தும் திறக்கவில்லை என்பதால், அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர். போலீசாரும் விரைந்து வீட்டின் கதவை உடைத்து கொண்டு பார்த்தபோது, கோபால், மனைவி பியூட்டி, மகன் என 3 பேருமே கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று தெரியவில்லை. வீடு முழுக்க ரத்தமாக இருந்தது. இதை பற்றி விசாரித்து வருகிறோம்" என்றார். இப்படி ஒரு குடும்பத்தையே கொடூரமாக மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை தந்துள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications