பாதுகாப்பிற்கு தயார் ஆகுங்கள்.. காஷ்மீரில் குவிக்கப்படும் துணை ராணுவப்படை.. 3 முக்கிய காரணங்கள்!
காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வருவதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வருவதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
காஷ்மீரை நோக்கி கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்ற வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்ற பின்தான் அங்கு பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.

முதல் காரணம்
அதன்படி முதலாவதாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. மிக பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்க போவதாக உளவு தகவல்கள் வந்துள்ளது, இதுதான் பாதுகாப்பை பலப்படுத்த முதல் காரணம் ஆகும்.

அடுத்து காரணம்
அதேபோல் இந்த நடப்பு லோக்சபா கூட்ட தொடரில் மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ வை நீக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி நடக்கும் நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும். வன்முறைகள் அங்கு கைமீறி நடக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்தவும் ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

கடைசி காரணம்
அதேபோல் காஷ்மீரில் கடந்த ஆறு மாதமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் காஷ்மீரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். அதற்கு முன் காஷ்மீரை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications