மும்பையில் இடிந்து விழுந்த 3 மாடிக் குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாப பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் காரவே விலேஜ் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகள் அருகிலுள்ள குடிசைகளின் மேலும் விழுந்ததால் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றினர். இரவு வரை நீடித்த மீட்புப் பணிகளில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 22 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மகேந்திரா, அவரது மகள் பாரி ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவ மனையின் அனுமதிக்கப்பட்ட மேலும் 4 பேர் உயிரிழந்த காரணத்தினால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.