ஜெய்பூரில் கொடூரம்: 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 3 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி ரத்தப்போக்குடன் சாலையோரம் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் குருத்வாராவில்(சீக்கியர்களின் கோவில்) பணியாற்றி வரும் நபரின் 3 வயது மகள் ஸ்ருதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமை இரவு குருத்வாரா அருகே விளையாடிக் கொண்டிருந்த ஸ்ருதியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றார்.
அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கனோடா பகுதியில் சாலையோரம் அவரை வீசிவிட்டு சென்றுவிட்டார். ரத்தப் போக்கு ஏற்பட்டு சாலையோரம் கிடந்த சிறுமியை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மகளை காணவில்லை என ஸ்ருதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ருதி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை கைது செய்யப்படுவார் என்றும் ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார்.