மும்பையில் சிறுமியை பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆர்.சி.எப். பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். அவர் தனக்கு பழக்கமான சிறுமியை தனது நண்பரான ஷாபாசின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார்.

Three youths arrested for gang-rape in Mumbai

அங்கு வைத்து சல்மான் மற்றும் ஷாபாஸ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை யாரிடமாவது கூறினால் உன்னை அசிங்கப்படுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவரும் தனக்கு நேர்ந்தது பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சல்மான், ஷாபாஸ் ஆகியோரின் நண்பர் இர்பானும் சேர்ந்து சிறுமியை மிரட்டத் துவங்கியுள்ளார். இதையடுத்து தான் அவர் தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி சேம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+