இனப்பெருக்கத்திற்கு விடப்பட்ட பெண் புலி பண்ட்டியைக் கடித்துக் கொன்ற ஆண்புலி குமார்!
பெங்களூர்: கர்நாடகாவில் இனப்பெருக்கத்திற்காக பெண் புலியுடன் விடப்பட்ட ஆண் புலி, அப்பெண் புலியைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி என்ற 5 வயதான பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை காலை அதே கூண்டுக்குள் குமார் என்ற 7 வயதான ஆண் புலியையும் உலவ விட்டனர்.

ஆனால், காதலுடன் அணுகுவதற்குப் பதில், பண்ட்டியை கண்ட குமார் ஆவேசமாக அதன்மீது எகிறிப்பாய்ந்தது. பயந்து ஒதுங்கிச் சென்ற பண்ட்டியை கைகளால் அடித்தும், பிடித்து இழுத்துக் கடித்தும் குமார் கோபத்துடன் தாக்கியது. இதில் படுகாயமடைந்து கீழே விழுந்து கிடந்த பண்ட்டியை கூண்டில் இருந்து வெளியே தூக்கிய கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தனர்.
எனினும், கழுத்தில் கடிபட்ட காயத்தில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி பண்ட்டி நேற்று உயிரிழந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications