கர்நாடக அரசியல் முடிவை அப்போதே கணித்த ஜன் கீ பாத்.. சொன்னபடியே நடந்தது!
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டது. அவர்கள் நடத்திய கருத்து கணிப்பு அப்படியே உண்மையாகி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 75 இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. 41 இடங்களுடன் மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்த நிலையில் யாருக்கும் வெற்றி உறுதியாகவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பல சேனல்கள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறி இருந்த போதும் ஜன் கீ பாத் மட்டும் மிக துல்லியமாக யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று துல்லியமாக கூறியது.
கர்நாடகாவில் ஜன் கீ பாத் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. பாஜக 93-114 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதை யாரும் பெரிதாக நம்பவில்லை. அதன்படி பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து இருப்பதால் பெரும்பான்மை பெற 112 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் 73 -82 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 33-42 தொகுதிகளில் வெற்றி பெறும்.மற்ற கட்சி, சுயேட்சைகள் 2- 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அவர்கள் நடத்திய கருத்து கணிப்பு அப்படியே உண்மையாகி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications