திருப்பதி பிரம்மோற்சவம்: அன்ன வாகனம், சிம்ம வாகனத்தில் உலா வந்த மலையப்பசாமி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றிரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார்.
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றவது நாளான இன்று மலையப்பசாமி சிம்மவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 23ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.48 மணிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரவு கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்துகொண்டு ஊர்வலமாக வந்து, செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலிடம் வழங்கினார்.
மலையப்ப சாமி பவனி
முதல்நாள் உற்சவமாக இரவு 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்தில் நான்குமாடவீதியில் பவனி வந்தார். அப்போது மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோவிந்தா முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் உற்சாக முழக்கம்
பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். நேற்றிரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். கோலாட்டம், பஜனைகள் களைகட்ட பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலத்தில் வந்தனர்.

சிம்ம வாகனத்தில் பவனி
பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக 4 மாட வீதிகளில் பவனி வந்தார். விலங்குகளில் வலியது சிங்கம். ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என கூறியுள்ளார்.

தரிசித்த பக்தர்கள்
பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம்தான் நரசிம்ம அவதாரம். இதை விளக்கும் வகையில் மலையப்பசுவாமி யோகநரம்சிம்ம அலங்காரத்தில் இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சுவாமி ஊர்வலத்தின்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டும், கற்பூர ஆரத்தி எடுத்தும் தரிசனம் செய்தனர்.

27ஆம் தேதி கருடசேவைள
இன்றிரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் முத்து பல்லக்கில் காளங்கிநர்த்தன கோலத்தில் மாட வீதிகளில் பவனி வருகிறார். 27ஆம் தேதியன்று கருடசேவை நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்களை எதிர்நோக்கி திருமலை காத்திருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications