திருப்பதி பிரம்மோற்சவம் : கருடசேவையை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். போலீஸ் வைத்திருந்த தடுப்பு வேலிகளை மீறி பக்தர்கள் செல்ல முயன்றதால் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும் வண்ண வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சுவாமி வீதி உலா
கடந்த 5 நாட்களாகவே பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை மாலை இருவேளைகளிலும் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இன்று நடைபெறும் கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மோகினி அலங்காரத்தில்
பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று எம்பெருமான் ஏழுமலையான், நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில், மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரும் வீதி உலா
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, புடவை அணிந்து நாச்சியர் திருகோலத்தில் தனது அழகை கிருஷ்ணராக தோன்றி அவரே ரசித்தார் என்பது போல் நாச்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாச்சியார் திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளின் வழியே வலம் வந்த மலையப்ப சுவாமியை, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
சுவாமி வீதியுலாவின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையை காண இன்று காலை முதலே பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
3 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால், திருமலை எங்கும் பக்தர்களின் கூட்டமே தென்படுகின்றது. இதையடுத்து பாதுகாப்பு பணிகளில் 4 ஆயிரத்து 600 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் 710 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 550 பஸ்கள் மூலம் பக்தர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், நான்கு மாட வீதியில் சுவாமி வீதிஉலா காண வரும் பக்தர்களுக்காக நாளை காலை 12 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரத்திற்கு 1 முறை பால், மோர், ஆகியவை வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications