திருப்பதி பிரம்மோற்சவம்: நாளை கருடசேவை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட வாகனசேவை ஞாயிறன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களும் சேஷ வாகனம், ஹம்சவாசனம், சிம்மவாகனம், முத்துப்பந்தல் வாகனங்களில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கற்பக விருட்ச வாகனம்
பிரம்மோற்சவ விழாவின் 4வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடைபெற்றது. இறைவன் ஏழுமலைவாசன் கேட்ட வரம் தருபவன் , அந்த இறைவனே கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வருவதை பக்திப்பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

நடனமாடிய பக்தர்கள்
மலையப்ப சவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வீதி உலா வரும் போது அவருக்கு முன்னால் பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கோலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் சாமி வீதி உலாவுக்கு முன்னால் அணிவகுத்து சென்றன.

கருட வாகனம்
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான ஞாயிறன்று காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டாள் சூடிய மாலை
திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் ஆகியவை கொண்டு செல்லப்படுவது வழக்கம்.தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதற்காக, ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடைபெற்றது. ஆண்டாளுக்கு பிரம்மாண்ட மாலை சூடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத் தப்பட்டன. பின்னர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவை மேள தாளங்கள் முழங்க மாட வீதிகள் வழியாக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.இவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5வது நாளன்று ஞாயிறன்று பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications