சாரதா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற மமதா கட்சியின் மதன் மித்ரா கமர்ஹாட்டியில் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா கமர்ஹாட்டி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கமர்ஹாட்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. மதன் மித்ரா மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக தொடர்ந்து பின் தங்கியுள்ளது. இந்நிலையில் சாரதா ஊழலில் சிக்கிய மதன் மித்ரா கமர்ஹாட்டி தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications