யாருக்கு வாக்களித்தனர்?.. வித்தியாசமான முறையில் வாக்காளர்களை வேவு பார்த்த திரிணமூல் காங்கிரஸ்!
கொல்கத்தா: வாக்குப் பதிவு இயந்திரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இருக்கும் பட்டன் மீது வாசனை திரவியத்தை தெளித்து வாக்காளர்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தனரா என்பதை அவர்களது விரல்களை நுகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் நேற்று நடைபெற்றது. அது போல் மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாநில பத்திரிகை
வாக்காளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநில பத்திரிகை அனந்தபசார் செய்தி வெளியிட்டுள்ளது.

விரலில் வாசனை
அந்த பத்திரிகையில் உள்ள செய்தி கூறுகையில், வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாசனைத் திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து விரலில் வாசனை வருகிறதா என சோதனை செய்தனர்.

புறக்கணிப்பு
இதன் மூலம் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததை உறுதி செய்தனர் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஷிஷிர் பஜோரா கூறுகையில் மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என முன்கூட்டியே அறிந்த திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சியினர் இது போல் எந்த எல்லைக்கும் செல்வர் என்றார்.

முன்னரே நடந்ததுதான்
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி கூறுகையில் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. ஏற்கெனவே இது போல் வாசனை திரவியம் மூலம் கண்டறிந்துள்ளோம் என்றார். எனினும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications