உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிரானதாம் தமிழக ஜல்லிக்கட்டு சட்டம்... அபிஷேக் சிங்வி
உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானதாக இருக்கிறது தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டம் என பீட்டா வக்கீல் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கு எதிரானதாக இருக்கிறது தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டம் என்று பீட்டா வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
வரலாறு காணாத யுகப் புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. தற்போது இச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா, விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கில் பீட்டா சார்பாக ஆஜராகும் மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி டெல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் இரு கருத்துகளுக்கும் எதிராகவும் உள்ளது தமிழக அரசின் சட்டம்.
மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட வழக்குக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. அதேபோல் பீட்டாவுக்காக நான் ஆஜராவது என்பது தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் என்கிற அடிப்படையில்தான். இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.












Click it and Unblock the Notifications