ஜல்லிக்கட்டு.. தமிழக அரசின் புதிய சட்டம் செல்லும்... அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உறுதி

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நல அமைப்பான கியூப்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

TN's new law is valid says Mukul Rohatgi

மேலும், 2016ம் ஆண்டின் மத்திய அரசின் அறிவிப்பாணையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 6 வாரத்தில் பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி செய்தியாளர்களிடம், கலாச்சாரத்தை காப்பதற்காக தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டுக்காக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் இருந்து புதிய சட்டம் வேறுபட்டுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+