”நீங்க கெஜ்ரியோட விருந்து சாப்பிடனுமா? ஜஸ்ட் 20 தவுஸண்ட் ரூபிஸ்தான்”
பெங்களூர்: பெங்களூரில் "ஆம் ஆத்மி" கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிடுவதற்கு ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் , டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வார இறுதியில் பெங்களூர் வர இருக்கிறார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு கெஜ்ரிவாலின் சுற்றுப்பயணத்தை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.இதன் படி கெஜ்ரிவால் பெங்களூரில் தங்கியிருக்கும்போது பிரபலமான ஓட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அவருடன் அமர்ந்து சாப்பிட விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்றும் இதற்காக ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
"இன்போசிஸ்" நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ,சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தவருமான பாலகிருஷ்ணன் இந்த விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications