மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை
டெல்லி: காந்தி ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இன்று மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல் காந்தி நினைவிடத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
[ மக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது ]
#WATCH Prime Minister Narendra Modi pays tribute to #MahatmaGandhi at Rajghat. #Gandhi150 pic.twitter.com/l2kk3bHeGf
— ANI (@ANI) October 2, 2018
நாடு முழுவதும் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
டெல்லி ராஜ்காட் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் விடுத்திருந்த பிறந்த நாள் செய்தியில், மகாத்மா காந்தி போதித்த அமைதி, சகோதரத்துவம், நல்லிணிக்கம், அகிம்சை போன்ற உயரிய தத்துவங்களை மனதில் கொண்டு அனைவரும் செயல்பட இன்று உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி துணை நிலை ஆளுநல் அனில் பைஜால், மூத்த பாஜக தலைவர் அத்வானி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதேபோல நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.