பேஸ்புக் மூலமாக சட்டவிரோதமாக கரடி, குரங்குகளை விற்கும் கும்பல்.. திடுக் தகவல்
டெல்லி: பேஸ்புக் மூலமாக அரிய வகை, கரடிகள், குரங்குகளை விற்று வருவது அதிகரித்து வருவதாக மலேசியாவைச் சேர்ந்த டிராபிக் என்ற அமைப்பு கூறியுள்ளது.
உலக வன விலங்குகள் தினமான இன்று இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் டிராபிக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திட்ட மேலாளர் கணிதா கிருஷ்ணசாமி கூறுகையில்,

பேஸ்புக் மூலம் விற்பனை...
சமூக வலைதளங்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. எல்லாமே இதில் தான் நடக்கிறது. அந்த அடிப்படையல் இப்போது அரிய வகை விலங்குகளையும் இதன் மூலமாக விற்கும் செயல் அதிகரித்து வருகிரது.

மலேசியாவில் அதிகம்...
குறிப்பாக மலேசியாவில் இந்த செயல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மலேசியாவைச் சேர்ந்த 14 பேஸ்புக் குரூப்களைக் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

அரியவகை விலங்குகள்...
இந்த குரூப்கள் மூலமாக 300க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகள் விற்கப்பட்டுள்ளன. சூரியக் கரடி, ஜிப்பான் வகை குரங்குகள், ஓட்டர்கள், பின்டுராங், கரடி பூனை உள்ளிட்டவை இதில் அடக்கம்.

வேட்டையாட தடை...
80 வகை விலங்கினங்களை ஆராய்ந்ததில் அதில் 60 சதவீதம் மலேசியாவைச் சேர்ந்தவைாகும். இவை வேட்டையாட தடை விதிக்கப்பட்டவை.

ஆமை...
மேலும் 25 சதவீத விலங்குகள் மலேசியாவுக்குச் சம்பந்தமே இல்லாதவை. அதையும் மலேசியாவில் விற்றுள்ளனர். குறிப்பாக மஞ்சள் நிற காக்கடூ காகடுவா (இந்தோனேசியா), மடகாஸ்கரைச் சேர்ந்த ஆமை வகை ஆகியவை இவை.

பேஸ்புக் குரூப்புகள்...
இந்த 14 பேஸ்புக் குரூப்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. ஆனால் அதில் கிட்டத்தட்ட 68,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.

சட்டரீதியாக நடவடிக்கை...
இந்த குரூப்களில் உள்ளவர்களை முடக்க சட்ட ரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறோம். மலேசியாவில் இது இப்போது அதிக அளவில் நடைபெறுகிறது' என்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications