எந்தப் பாலினம் என்பதை அரவாணிகளே தேர்ந்தெடுக்கும் உரிமை... மத்திய அரசு பரிசீலனை
டெல்லி: ஆணா பெண்ணா என தங்களது பாலினத்தை தாங்களே தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அரவாணிகளுக்கான பல்வேறு நலன்கள் அடங்கிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஹார்மோன் காரணமாக ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுபவர்கள் அரவாணிகள் எனப் படுகின்றனர். இதற்காக அவர்கள் ஆபரேஷனும் செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், மூன்றாம் பாலினமான அரவாணிகளின் சமூக அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயன்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக மத்திய சமூக நீதித்துறை நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்தது. அந்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது சட்டம் இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.
அதன்படி, அரவாணிகள் தங்களை ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் என தங்கல் விருப்பப்படி அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.
அதோடு, அரவாணிகளின் பாலின மாற்றத்திற்கான மருத்துவச் செலவையும் மத்திய அரசு ஏற்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது. இதற்காக நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து அந்த ஆபரேஷன்களை இலவசமாக செய்யலாமா அல்லது இத்தகைய ஆபரேஷன்களுக்கு மானியம் வழங்கலாமா என்பது குறித்து அதில் ஆராயப் படுகிறது.
உடல் ரீதியான மாற்றத்திற்கான ஆபரேஷன்கள் மட்டுமின்றி ஹார்மோன் தெரபி, குரல் மாற்றுச் சிகிச்சை உள்ளிட்டவை வழங்கவும் அரசு ஏற்பாடு செய்யும் எனத் தெரிகிறது.
இவ்வாறு புதிய திட்டங்களை மத்திய அரசு அமல் படுத்துவதன் மூலம் பாலினம் மாற விரும்பும் ஏழை மக்கள் அதிக பயன் பெறுவர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா அரவாணிகள் நலன் தொடர்பாக ராஜ்யசபாவில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார். இது விரைவில் லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப் பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், ‘வரும் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் அரவாணிகள் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications