தொடர் மழை: திருப்பதி செல்லும் 2 மலைப்பாதைகளிலும் போக்குவரத்து நிறுத்தம்
திருப்பதி: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமலையில் உள்ள 5 அணைகளும் நிரம்பியது. இதனால் அங்குள்ள கோகர்பம், பாபவிநாசம் அணையின் 2 மதகுகள் வழியாக நேற்று காலை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் அணையை ஒட்டியுள்ள மல்லமடுகு கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு சித்தூர் மற்றும் கடப்பா வருவாய் அலுவலர்களை தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு செல்லும் 2வது மலைப்பாதையின் 12வது கிலோ மீட்டர் முதல் 16வது கிலோ மீட்டர் வரை மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலைக்கு செல்லும் வாகனங்களை இணைப்பு சாலையில் 1வது மலைப்பாதை வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2வது மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளை தேவஸ்தான ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே நேற்று காலை பக்தர்கள் நடந்து செல்லும் வாரி மெட்டு பாதையில் உள்ள நிழற்குடையின் மீது பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. அப்போது, பக்தர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க திருமலைக்கு செல்லும் 2 மலைப் பாதைகளிலும் இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications