நாடாளுமன்றத் தேர்தல்: 100 தொகுதியில் வெல்ல மம்தா இலக்கு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் வெல்லவேண்டும் என்று முனைப்போடு களம் இறங்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இத

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி அதில் இருந்து வெளியேறினார். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

mamata banerjee

2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சியினரும் வியூகம் அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

வங்காளிகளை கவர

மேற்கு வங்காளம் மட்டும் அல்லாது வங்காளிகள் வசிக்கும் அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

100 தொகுதிகள் இலக்கு

மேற்கு வங்காளத்தில் மட்டும் 42 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அசாமில் 14 தொகுதிகளும், திரிபுராவில் 2 தொகுதிகளும், ஒடிசாவில் 21 தொகுதிகளும், ஜார்க் கண்ட்டில் 14 தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 100 தொகுதிகளை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் குறி வைத்துள்ளது.

ஒடிஷா, ஜார்க்கண்ட்

இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்திய திரிணா முல் காங்கிரஸ் இந்த முறை ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிசிர் அதிகாரி கூறியுள்ளார்.

ஆட்சியில் முக்கிய பங்கு

இந்த முறை மேற்கு வங்காளத்தையும் தாண்டி வெளி மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாம், திரிபுராவில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இதே போல் ஒடிசா, ஜார்க்கண்டிலும் கவனம் செலுத்த உள்ளோம். அடுத்து மத்தியில் ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் சிசிர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+