திரிபுராவில் அம்மா உணவகம் பாணியில் வாக்குறுதி தந்த பாஜக! மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ5க்கு சாப்பாடு!
திரிபுராவில் ரூ5க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
அகர்தலா: திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ5க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
திரிபுரா சட்டசபைக்கு வரும் 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. தற்போது திரிபுராவில் பாஜக ஆட்சியில் உள்ளது.

திரிபுராவில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் தவிர்த்து அகன்ற திரிபுரா பழங்குடி மக்களுக்கான தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் திப்ரா மோதா கட்சியும் களத்தில் இருக்கிறது. பொதுவாக பாஜக- இடதுசாரிகள்,காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் திப்ரா மோதா கட்சி, தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
திரிபுராவில் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திரிபுரா வேட்பாளர்களில் 45 பேர் கோடீஸ்வரர்கள். மாநில முதல்வர் மாணிக் சஹாவின் சொத்து மதிப்பு ரூ13.90 கோடி. ஆனால் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் சர்மாவின் சொத்து மதிப்போ ரூ15.58 கோடியாம்.
இந்த பின்னணியில் திரிபுரா மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையை இன்று பாஜக வெளியிட்டது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதை பாஜக பொதுவாக விமர்சிக்கிறது. ஆனால் திரிபுரா தேர்தலுக்காக பாஜக வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது.
திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனுகுல் சந்திரா திட்டத்தின் கீழ் ரூ5க்கு உணவு வழங்கப்படும்; பெண் குழந்தைகளுக்கு ரூ50,000 பத்திரங்கள் வழங்கப்படும்; பழங்குடிகளின் பகுதிகளுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது பாஜக. ரப்பர், மூங்கில் ஆகியவற்றை அடிப்படையாக கோண்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்கிறது பாஜக. விவசாயிகளுக்கு ரூ6,000 வழங்கும் நிதி திட்டத்தில் மாநில அரசு சார்பாக கூடுதலாக ரூ2,000 வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது பாஜக.
பாஜக ஆட்சிக் காலத்தில் அரசியல் கலாசராமே அடியோ மாற்றபட்டுள்ளது எனவும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும் திரிபுராவில் 13 லட்சம் ' ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டுகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ107 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
2018-ம் ஆண்டு ச்ட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை அப்படியே தன்னுள் கரைத்துக் கொண்டது பாஜக. மேலும் போட்டியிட்ட 51 தொகுதிகளில் 36-ல் பாஜக வென்றது. பெரும்பாலான பாஜக எம்.எல்.ஏக்கள், முந்தைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications