திரிபுராவில் தொங்கு சட்டசபை.. பாஜகவிற்கு சிக்கலாமே.. நெருங்கி வரும் இடதுசாரிகள்.. டைம்ஸ் நவ் கணிப்பு
- திரிபுராவில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் உள்ளதாக டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது,
அகரத்தலா: திரிபுரா பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க சான்ஸ் குறைவு, அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று டைம்ஸ் நவ் - ஈடிஜி ரிசர்ச் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும் . 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
2018 வரை திரிபுரா என்பது கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. அங்கே பாஜக மிகப்பெரிய அளவில் வியூகங்களை வகுத்து வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட் கோட்டையாக திரிபுரா இருந்து வந்தது. கேரளா, திரிபுரா இரண்டு மாநிலங்களில் மட்டுமே கம்யூனிஸ்டுகள் உள்ளன என்ற அளவில் பேசப்பட்டது. மாணிக் சர்க்கார் ஆட்சிக்கும் நல்ல பெயர் இருந்தது. நேர்மையான மனிதர், நாட்டிலேயே ஏழையான முதல்வர் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அதை எல்லாம் உடைத்து போடும் அளவிற்கு மாணிக் சர்க்கார் ஆட்சி முடிவிற்கு வந்தது.

முடிந்த ஆட்சி
2018ல் மாணிக் சர்க்காரின் 4 முறை ஆட்சிக்கு முடிவு கட்டி அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. பிரம்மாண்ட
பிரச்சாரத்திற்கு பின் பாஜக அங்கே ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி திரிபுரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக மீண்டும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. முக்கியமாக பிரதமர் மோடி நேரடி கலப்பிரச்சாரங்களை மேற்கொண்டார். இந்த நிலையில்தான் திரிபுரா பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க சான்ஸ் குறைவு, அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று டைம்ஸ் நவ் - ஈடிஜி ரிசர்ச் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.

குழப்பம்
பாஜக 24 இடங்களை வென்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும் என்று நிலையில், பாஜகவிற்கு 24 இடங்களே கிடைக்கும் என்பதால் அங்கு தொங்கு சட்டசபை உருவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறையை விட பாஜக 20 இடங்கள் குறைவாக வேலால் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

கடும் போட்டி
பாஜகவிற்கு கம்யூனிஸ்ட் கடும் போட்டியை கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. டிஎம்பி 14 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதில் சிக்கல் ஏற்படும் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications