37 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.840 திருடியவர் நேற்று முன்தினம் கைது
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: 37 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.840 திருடியவர் திரிபுராவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள நாராயண்பூரைச் சேர்ந்தவர் அபினாஷ் தாஸ்(எ) சாது(57). அவர் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்துவீட்டுக்காரரிடம் இருந்து ரூ.840 ரொக்கத்தை திருடிவிட்டார். அதில் இருந்து அவர் இத்தனை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை அகர்தலா அருகில் உள்ள விமான நிலைய காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாது நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications