பிரம்மோற்சவ விழாவிற்கு தயாராகும் திருப்பதி: இன்று ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளதை ஒட்டி கோவிலை தூய்மைபடுத்தும் இன்று காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மோற்சவ கொடியேற்றம்
பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25-ஆம் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை (26-ஆம் தேதி) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. அக்டோபர் 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

கருடசேவை
முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்விளக்கு அலங்காரம்
பிரமோற்சவத்தையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது.

நேரடி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முதியோர், ஊனமுற்றோருக்கான நேரடி தரிசனமுறை உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் இந்த நேரடி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications