இரட்டை இலைக்காக லஞ்சம்: டெல்லி போலீஸ் முன் நேரில் ஆஜரானார் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன் ஆஜராகியுள்ளார்.
டெல்லி : லஞ்சப் புகார் வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுத் தர புரோக்கர் சுகேஷ் சந்தர் என்பவருக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 17ம் தேதி இரவு டெல்லியின் தெற்கு பகுதியில் நடத்திய ஆய்வின் போதுசுகேஷ் சந்தர் 1 கோடியே 30 லட்சம் பணத்துடன் போலீசாரிடம் சிக்கினார். சுகேஷ் போலுசிடம் அளித்த வாக்குமூலத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது தினகரன் முன் பணம் கொடுத்ததாகக் கூறினான்.

சம்மன்
இதன் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸ் சம்மன் அளித்திருந்தது. நேரில் ஆஜராக இன்று காலையில் டெல்லி சென்றார் டிடிவி தினகரன்.

ஆஜர்
12 மணியளவில் டெல்லி சென்ற தினகரன் 3 .15 மணியளவில் சாணக்யாபுரியில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். தினகரனுடன் 3 வழக்கறிஞர்கள் குழுவும் வந்துள்ளன.

சராமரி கேள்வி
தினகரனிடம் நேருக்கு நேர் விசாரணை நடத்துவதற்காக புரோக்கர் சுகேஷ் சந்தரம் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார். டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் சராமரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

கைதாக வாய்ப்பு
இன்று இரவு வரை இந்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் முடிவில் ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications