இரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனுக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான டிடிவி தினகரனின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைதான டிடிவி தினகரனின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தினகரனின் காவலை ஜூன் 12 வரை நீட்டித்து டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, கடந்த 22ம் தேதியன்று மாவட்ட நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கடந்த 26ஆம் தேதி விசாரணை
அப்போது தினகரனின் வக்கீல் வரவில்லை என்பதால், வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, தினகரனின் ஜாமீன் மனு, டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இன்றைக்கு ஒத்திவைப்பு
விசாரணை அதிகாரி சஞ்சய் செராவத் ஆஜராகததால் விசாரணையை தள்ளி வைக்குமாறு போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூனம் சவுத்ரி விசாரணையை வரும் இன்றைக்கு ஒத்திவைத்தார்.

தினகரன் ஒத்துழைக்கவில்லை
இந்நிலையில் தினகரனின் ஜாமீன் மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய தினகரன் ஒத்துழைக்க வில்லை என டெல்லி போலீசார் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுறத்தாக்கல் செய்துள்ளார்.

காவல் நீட்டிப்பு
இதனை விசாரித்த நீதிமன்றம் தினகரனுக்கு வரும் ஜூன் 12 ம் தேதி வரை சிறை காவலை நீட்டித்து நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தினகரனுடன் கைதான அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் இடைத்தரகர் சுகேஷ் ஆகியோரின் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் நீட்டிப்பால் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications