ரூபா பேட்டிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துங்கள்.. கர்நாடக முதல்வருக்கு தினகரன் தரப்பு கடிதம்!
சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை வெளிச்சத்துக் கொண்டு வந்தவர் சிறைத்துறை டிஐஜி ரூபா. சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து தர டிஜிபி சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் இரு மாநிலங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்தது ரூபா போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இருப்பினும் சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்ட சலுகைகள் உண்மை தான் என்றும் அவர் தெரிவித்து வந்தார். இதனை சசிகலா தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில் சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
விளம்பரத்திற்காக சசிகலா குறித்து தவறாக தகவலை தமிழ் ஊடகங்களுக்கு முன்னாள் டி.ஐ.ஜி ரூபா அளிக்கிறார் எனவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications