For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாமுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஐஐஎன்னில் படித்திருப்பாரோ?: ட்விட்டரில் திட்டும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவை மக்கள் ட்விட்டரில் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சரை மக்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாரத ரத்னா

"APJ Abdul Kalam" இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு தான் என விஜய் பஞ்சியார் தெரிவித்துள்ளார்.

ஐஐஎன்

நீரா யாதவ் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைக்கிறாரோ. அவர் என்ன ஐடியா ஐஐஎன்-னில் படித்தவரா? என குஸ்தக் நிகா ட்வீட் செய்துள்ளார்.

லூசுகளா

அட லூசுகளா அப்துல் கலாம் இன்னும் இறக்கவில்லை. பாஜக அமைச்சர் நீரா என ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கல்வி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தான் அவர்களின் கல்வி என ஆஷிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.

English summary
Tweeples are making fun of Jharkhand education minister Neera Yadav who paid floral tribute to former president Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X